Monday, November 28, 2011

கத்திரிக்கோல் பிறந்த கதை தெரியுமா?


இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் கத்தரிக்கோல்.
கி.மு. 1500 இல் கத்தரிக்கோல் எகிப்து நாட்டில் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இங்கிலாந்தில் ஆரம்ப காலத்தில் கத்தரிக்கோல் உயர்ந்த, அபூர்வ பொருளாக கருதப்பட்டது. விலை உயர்ந்து காணப்பட்ட கத்தரிக்கோல் சாமானிய மக்கள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. 1761 இல் இந்த போக்கு மாறி, பலரும் கத்தரிக்கோலை பயன்படுத்த ஆரம்பித்தனர்.

ராபர்ட் ஹிந்ச்ளிப் (Robert Hinchliffe) என்பவர் முதன் முதலில் தொழிற்சாலை அமைத்து கத்தரிக்கோலை தயாரிக்க ஆரம்பித்தார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஸ்டைன்லெஸ் ஸ்டீலால், நீண்ட காலத்திற்கு பயன்பட கூடிய மழுங்காத கூறிய முனை கொண்ட கத்தரிக்கோல் தயாரிக்கப்பட்டன.


No comments:

Post a Comment