Thursday, August 11, 2011

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்


எந்தனைப் போலவே ஜெனனம் எடுத்தவர்கள்
இன்பமாய் வாழ்ந்திருக்க


யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்
உன்னடியேன் தவிப்பதம்மா

உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்
உன் பாதம் சாக்ஷியாக

உன்னையன்றி வேறு துணை இனி யாரையும் காணேன்
உலகந்தனில் எந்தனுக்குப்

பின்னையென்று நீ சொல்லாமல் வறுமை போக்கடித்து
என்னை ரக்ஷி பூலோகம் மெச்சவே

பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய்க்
காத்திடம்மா

அன்னையே இன்னமும் அடியேனை ரக்ஷிக்க
அட்டி செய்யாதேயம்மா

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே (9)

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" 10

பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடென்னைப்
பாங்குடன் ரக்ஷிக்கவும்

பக்தியாய் உன் பாதம் நித்தம் தெரிசித்த
பாலருக்கு அருள் புரியவும்

சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலியன் அணுகாமலும்

சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று
வாழ்ந்து வரவும்

பேர் பெற்ற காலனைப் பின் தொடர வொட்டாமல்
பிரியமாய்க் காத்திடம்மா

பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன
கவிபிழைகளைப் பொறுத்து ரக்ஷி

"ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த
என் அன்னை ஏகாம்பரி நீயே"

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. 10

No comments:

Post a Comment